யூரிக் அமிலம் முதல் நீரிழிவு வரை... பிரியாணி இலை இருந்தால் போதும்...!!

உணவின் மணத்தை கூட்டி சுவையை அதிகரிக்கும் பிரியாணி இலை, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.  இதன் தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 11, 2023, 07:48 PM IST
  • உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் பிரிஞ்சி இலை.
  • பிரிஞ்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவிதில்லை.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலைகள் மிகவும் சிறந்தது.
யூரிக் அமிலம் முதல் நீரிழிவு வரை... பிரியாணி இலை இருந்தால் போதும்...!! title=

உணவின் மணத்தை கூட்டி, சுவையை அதிகரிக்கும் பிரியாணி இலை, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பிரியாணி இலை அல்லது பிரிஞ்சி இலை என்பது இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். சைவம் முதல் அசைவம் வரை எல்லாவற்றிலும் பிரியாணி இலைகள் சேர்க்கப்படுகிறது. இதன் தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது. இந்தியா, சீனா மற்றும் பூட்டான் போன்ற தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் இதன் விளைச்சலும் தேவையும் மிக அதிகம். நம் நாட்டில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும், பிரியாணி இலைகள் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. 

உணவிற்கு சுவையையும்  மணத்தையும் கொடுக்கும் இந்த பிரிஞ்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவிதில்லை. பல நோய்களைக் குணப்படுத்த இந்த பிரிஞ்சி இலைகளைப் பயன்படுத்தலாம். பிரியாணி இலை பல நோய்களுக்கு ஒரு சஞ்சீவியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.  மருத்துவ குணம் நிறைந்த பிரிஞ்சி இலைகளில் பொட்டாஷியம், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு நன்மை பயக்கும். 

பல நோய்களுக்கு அருமருந்தாகும் பிரிரியாணி இலை

யூரிக் அமில பிரச்சனைக்கு தீர்வு தரும் பிரியாணி இலைகள்

பிரியாணி இலைகளை உட்கொள்வது யூரிக் அமில நோயாளிகளுக்கு ஒரு சஞ்சீவினியை போன்றது. பிரியாணி இலை சைஜிஜியம் பலியந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகிறது. பிரியாணி இலை உடலில் இருந்து பியூரின் எனப்படும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. இந்த அழற்சி எதிர்ப்பு பண்பு வலியும் வீக்கத்தையும் குறைக்கும். 

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பிரியாணி இலை மன ஆரோக்கியதை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். மன அழுத்தம் அல்லது குழப்பம் அதிகமாக இருந்தால், இரவில் தூங்கும் முன் 2 இலைகளை எடுத்து அதை எரித்து உங்கள் அறையில் வைக்கவும். இதன் புகையை மணப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

சிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்கும்

பிரியாணி இலைகள் சிறுநீரக கற்களைத் தடுக்க உதவும். பிரியாணி இலை உடலில் உள்ள யூரியாஸின் (சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் ஒரு நொதி) அளவைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்ட்டுள்ளது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது நிவாரணத்தை கொடுக்கும்.

நுரையீரலை வலுப்படுத்தும்

சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், பிரிஞ்சி இலைகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பிரியாணி இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். பின் இந்த நீரால் ஒரு துணியை நனைத்து மார்பில் வைத்து, இவ்வாறு செய்வதால் சுவாசப் பிரச்சனை நீங்கும். நுரையீரலை வலுப்படுத்தும்.

உடல் சோர்வுக்கு அருமருந்து

காரணம் இல்லாமல் அடிக்கடி சோர்வாக உணர்ந்தால், புத்துணர்வை கொடுக்கும் பிரியாணி இலைகளை பயன்படுத்தவும். ஏனெனில் இதன் வாசனை புத்துணர்வை கொடுக்கிறது.  இதனை எரித்து வரும் புகை மூலம் கொடுக்கப்படும் அரோமாதெரபி மூலம், உடல் தளர்வடைகிறது. இதன் காரணமாக  மனதுக்கும் நிம்மதி கிடைக்கிறது.

இரத்த சர்க்கரையை குறைக்கும்

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலைகள் மிகவும் சிறந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பொடி செய்து ஒரு மாதம் காலம் சாப்பிட இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பிரியாணி இலைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க இதனை கஷாயமாக தயாரித்து குடிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News