22 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு பரிசாக வந்த யானை... திரும்ப கேட்ட தாய்லாந்து..!

யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே ராஜீய நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த யானை தற்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2023, 11:26 AM IST
  • இலங்கைக்கும் தாய்வானுக்கும் இடையிலான ராஜீய உறவுகளில் பாதிப்பு ஏற்படுமா?
  • புத்த கோவிலிலிருந்து மீட்கப்பட்ட யானை.
  • யானையின் கால்களில் ஏற்பட்ட காயங்கள்.
22 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு பரிசாக வந்த யானை... திரும்ப கேட்ட தாய்லாந்து..! title=

யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே ராஜீய நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த யானை, தவறான நடத்தப்பட்டதன் காரணமாக தற்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முத்து ராஜா என்று அழைக்கப்படும் 29 வயதுடைய 4000 கிலோ எடையுள்ள  சக் சுரின் என்ற தாய்லாந்து யானை  ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) மதியம் தாய்லாந்து வந்தடைந்தது. தாய்லாந்து அரச குடும்பம் 2001 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு சாக் சூரின் யானையை பரிசாக வழங்கியது.

யானை  சித்திரவதை செய்யப்படுவதாக எழுந்த புகார்

தாய்லாந்திடம் இருந்து பெறப்பட்ட யானை சாக் சூரின், இலங்கையில், ஒரு புத்த கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அங்கு அதற்கு புதிய பெயர் சூட்டப்பட்டது. முத்து ராஜா என்ற பெயரிடப்பட்ட அந்த யானை ஆன்மீக ஊர்வலங்களில் கௌரவிக்கப்பட்டது. இருப்பினும், விலங்கு உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆர்வலர் குழு (RARE) யானை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, சித்திரவதை செய்யப்படுகிறது மற்றும் புறக்கணிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

புத்த கோவிலில் இருந்த யானை

கடந்த ஆண்டு, இந்த யானை விவகாரத்தில் தலையிட வேண்டும் என தாய்லாந்து அதிகாரிகளிடம் RARE வேண்டுகோள் விடுத்தது, அந்த நேரத்தில் முத்து ராஜா, கந்தே விகாரயா கோவிலில் இருந்து வந்தது. இந்த யானையை இலங்கை தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்ற கடந்த நவம்பர் மாதம் தேவஸ்தானம் ஒப்புக்கொண்டது.

யானையின் கால்களில் ஏற்பட்ட காயங்கள்

மரம் வெட்டும் குழுவினருடன் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் யானையின் காலில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் காயங்களுக்கு சிகிச்சை ஏதும் அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட போது யானைக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காயங்கள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டதாகவும் RARE கூறியது. RARE அமைப்பின் நிறுவனர் பாஞ்சாலி பனாபிட்டிய, "யானை தாய்லாந்து திரும்ப சென்ற நிகழ்வு என்பது முடிவல்ல, முத்துராஜாவின் புதிய வாழ்க்கையின் ஆரம்பம்" என்றார்.

மேலும் படிக்க | ரூ. 12 கோடி அபராதம் - வீட்டு பக்கத்தில் இருந்த மரங்களை வெட்டிய நபர்... அதுக்கு சொன்ன காரணம் இருக்கே!

புத்த கோவிலிலிருந்து மீட்கப்பட்ட யானை

மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியரான மதுஷா பெரேரா, AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், முத்து ராஜா கடந்த ஆண்டு புத்த கோவிலிலிருந்து மீட்கப்பட்டபோது வலி மற்றும் புண்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறினார். வெள்ளிக்கிழமைக்குள், யானைக்கு ஏற்பட்ட புண் பெரும்பாலும் குணமாகியிருந்தாலும், வசதிகள் இல்லாததால், மிருகக்காட்சிசாலையில் அதன் காலுக்கு முழுமையாக சிகிச்சையளிக்க முடியவில்லை சரியாக நடக்க முடியாத நிலையில் இருந்தது. பெரேரா மேலும் கூறுகையில், "அது தாய்லாந்தை அடைந்ததும், அங்குள்ள வல்லுநர்கள் அதை கவனித்துக்கொள்வார்கள், ஒரு நாள் அது சாதாரணமாக நடப்பதை நாம் பார்க்கலாம்." வருகை தந்த தாய்லாந்து கால்நடை மருத்துவரின் கூற்றுப்படி, தாய்லாந்தில் யானைக்கு நீர் சிகிச்சை, லேசர் சிகிச்சை மற்றும் குத்தூசி மருத்துவம் ஆகியவை அடங்கும். .

RERE முன்வைத்த கோரிக்கை

யானைகள் இலங்கையில் புனிதமானவையாகக் கருதப்படுவதுடன் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, முத்துராஜா கோயிலை விட்டு வெளியேறியதற்கு அதிருப்தி தெரிவித்த RARE, மிருகத்தை அலட்சியப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். முத்துராஜாவின் உடல்நிலை குறித்த பிரச்சினையை இலங்கை அரசாங்கத்திடம் எழுப்பத் தவறியதால் தாய்லாந்து அரசாங்கத்தின் பக்கம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் உரிய நேரத்தில் தலையீடு செய்யாததால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் தாய்வானுக்கும் இடையிலான ராஜீய உறவுகளில் பாதிப்பு ஏற்படுமா?

முத்து ராஜா கொழும்பிலிருந்து காலை 7:40 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒரு விமானத்தில் புறப்பட்டார், தாய்லாந்து அதிகாரிகள் $700,000 செலவாகும் என்று கூறினார், இருப்பினும் எந்த நாடு இதற்கு பணம் செலுத்துகிறது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.
இலங்கை - தாய்லாந்து உறவுகள்

இதற்கிடையில், இலங்கையை தளமாகக் கொண்ட வனவிலங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத் குணவர்தன கூறுகையில், முத்துராஜா என்பது திரும்பப் பெறப்பட்ட ஒரு பரிசு  என்ற நிலையில், இந்த நடவடிக்கை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். யானையின் நிலை குறித்து தாய்லாந்து மன்னரிடம் தனிப்பட்ட முறையில் நாட்டின் வருத்தத்தை தெரிவித்ததாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும்  படிக்க | ஜிப்லைனில் சென்ற சிறுவன்... திடீரென கட்டான கயிறு - 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News