அண்ணா சீரியல்: தோற்கடித்த ஷண்முகம்.. கொலை வெறியில் சௌந்தரபாண்டி

Anna Serial Today's Episode Update: தோற்கடித்த ஷண்முகம்.. கொலை வெறியில் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2024, 11:34 AM IST
  • ஜீ தமிழ் டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • இன்று நடக்க போவது என்ன.
அண்ணா சீரியல்: தோற்கடித்த ஷண்முகம்.. கொலை வெறியில் சௌந்தரபாண்டி title=

Anna Serial Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஜீ தமிழ் தொலைக்காட்சி அண்ணா (Anna Serial) எபிசோடில் இன்றைய எபிசோடில் அதாவது, ஸ்கூல் ஓனர் சௌந்திரபாண்டியும் உங்களுக்காக தானே ஸ்கூலை வாங்குறாரு என்று சொல்ல அவர் ஸ்கூலை வாங்கி பாராக மாத்த பிளான் பன்றாரு என்ற உண்மையை போட்டு உடைக்கின்றனர். மேலும் சௌந்தரபாண்டி ஸ்கூலை வாங்கினா அது கடைசி வரைக்கும் ஸ்கூலாக மட்டும் தான் இருக்கணும், அதை இடிக்கவோ, பாராக மாற்றவோ கூடாதுனு எழுதி கொடுக்க சொல்லுங்க என்று செக்மேட் வைக்க சௌந்தரபாண்டி அதற்கு நோ சொல்கிறார். 

பிறகு ஸ்கூலை வாங்குவதற்காக பணத்தை சேர்த்த கதைகளை சண்முகமும் அவனது தங்கைகளும் சொல்கின்றனர். ஷண்முகம் அவனது தங்கைகள் ஊர் காரர்கள் என எல்லாரும் ஓனரிடம் மண்டியிட்டு ஸ்கூலை கொடுக்க சொல்லி கேட்கின்றனர். பிறகு உண்டியலை திறந்து பணத்தை எடுத்து வைக்கும் போது மாற்றுத்திறனாளி மாணவன் எழுதிய லெட்டரும் கிடைக்க அதை படித்து பார்த்த ஓனர் இந்த ஸ்கூலை நான் ட்ரெஸ்ட்டுக்கு எழுதறேன், அந்த ட்ரேஸ்ட்டை நீங்க எடுத்து நடத்துங்க, இந்த பணத்தை வாங்கியவர்கள் கிட்டயே திருப்பி கொடுத்துடுங்க என்று சொல்கிறார். 

மேலும் படிக்க | வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! அட, இந்த நடிகரா..

இதனால் சௌந்தரபாண்டி அவமானப்பட்டு வீட்டிற்கு வர பாக்கியமும் இசக்கியும் கிண்டல் அடிக்க அவர் முத்துபாண்டியிடம் ஒன்னு அந்த ஷண்முகம் சாவணும், இல்ல அவனுக்கு பிடிச்சவங்க சாவணும் என்று  ஆவேசப்படுகிறார். இதையடுத்து ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்து ஷண்முகம் வெளியே வர அன் யூனிபார்மில் வந்த முத்துப்பாண்டி இங்க என்ன கூட்டம் என்று சவுண்ட் விட ஷண்முகம் பதிலடி கொடுக்க முத்துப்பாண்டி அவன் சட்டையை பிடிக்கிறான். 

ஊர்க்காரர்கள் எல்லாரும் இதை பார்த்து ஷண்முகத்துக்கு ஆதரவாக பேச முத்துப்பாண்டி ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News