அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டி ஸ்டைலியேயே ஷண்முகம் வைத்த ஆப்பு..!

Anna Zee Tamil Serial Today's Update: சௌந்தரபாண்டி ஸ்டைலியேயே ஷண்முகம் வைத்த ஆப்பு.. இது வேற மாதிரி ட்விஸ்ட் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2024, 02:56 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • பிரியாணி சாப்பிட்டு படுத்து தூங்கிய ஷண்முகம்.
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டி ஸ்டைலியேயே ஷண்முகம் வைத்த ஆப்பு..! title=

Anna Zee Tamil Serial Today's Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அரிவாளை தூக்கிய ஷண்முகத்தை அமைதிப்படுத்தும் பரணி எதையும் யோசித்து செய்யணும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழில் பல தொலைக்காட்சிகள் விதவிதமான கதையம்சங்கள் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பு வருகின்றன. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பிரபலமான சீரியல், அண்ணா (Anna Serial).  இன்று (ஏப். 15) நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம். அதாவது, பிரியாணி சாப்பிட்டு படுத்து தூங்கிய ஷண்முகம் திடீரென எழுந்து எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிடுச்சு என்று சொல்கிறான். மறுநாள் பஞ்சாயத்து ஆட்களை சந்தித்து என் தங்கச்சி இசக்கி சௌந்தரபாண்டி வீட்டில சந்தோசமாக இருக்காளா இல்லையானு நான் தெரிஞ்சிக்கணும் என்று முறையிடுகிறான். 

அடுத்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வர சனியன் ஏற்கனவே ஷண்முகம் வரும் விஷயத்தை சொல்லி விடுகிறான், பஞ்சாயத்து ஆட்களுடன் வரும் ஷண்முகம் என் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் விருந்துக்கு கூப்பிட வந்திருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி அதெல்லாம் வர முடியாது என்று சொல்கிறான். ஷண்முகம் பஞ்சாயத்து ஆட்களிடம் முத்துப்பாண்டி காலில் விழுந்து தெரியாமல் தாலி கட்டி விட்டதாக மன்னிப்பு கேட்ட விஷயங்களை சொல்லி முறையிடுகிறான். 

இதையடுத்து பஞ்சாயத்து ஆட்கள் முத்துப்பாண்டி விருந்துக்கு போய் தான் ஆகணும் என்று சொல்ல சௌந்தரபாண்டியும் இப்போ நீ போகலனா தப்பா போயிரும் என்று சொல்ல அவன் யூனிபார்மில் கிளம்பி வருகிறான். ஷண்முகம் நீங்காப்பி என்ன வேலைக்கா போறீங்க? விருந்துக்கு தானே வரீங்க வேட்டி சட்டையில் வாங்க என்று சொல்லி ட்ரெஸ்ஸை மாற்ற வைக்கிறான். 

மேலும் படிக்க | மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

அதுமட்டுமின்றி இருவரையும் ஊர்வலமாக அழைத்து செல்கிறான், எல்லாரிடமும் இசக்கி புருஷனை விருந்துக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி சொல்லி முத்துபாண்டியை வெறுப்பேற்றுகிறான். வீட்டிற்கு வந்ததும் ஆரத்தி எடுத்து ஒரு சிறப்பு விருந்தினர் வர வேண்டி இருக்கு என்று காக்க வைத்து வெங்கடேஷனை வீட்டிற்கு வர வைக்க முத்துப்பாண்டி பயங்கர காண்டாகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News