அண்ணா சீரியல்: ஷண்முகத்தின் பிரச்சனையை தீர்க்க பிள்ளையார் சுழி போட்ட சௌந்தரபாண்டி..!!

Anna Zee Tamil Serial Today's Episode Update: ஷண்முகத்தின் பிரச்சனையை தீர்க்க பிள்ளையார் சுழி போட்ட சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2024, 01:19 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் அண்ணா.
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அண்ணா சீரியல்: ஷண்முகத்தின் பிரச்சனையை தீர்க்க பிள்ளையார் சுழி போட்ட சௌந்தரபாண்டி..!! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் நடுஇரவில் பரணியிடம் என் அப்பன் முருகன் என்னை காப்பாற்றுவாரு என்று புலம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஷண்முகத்திற்கு யோசித்து யோசித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் வைத்து அவனுக்குள் ஒரு ஐடியா தோன்றுகிறது. சௌந்தரபாண்டி வீட்டில் தூக்கம் வராமல் அலைந்து கொண்டிருக்க முத்துப்பாண்டி என்ன ஆச்சு என்று கேட்க எப்படிடா அந்த ஷண்முகம் எனக்கு முன்னாடி கோர்ட் சூட் போட்டு ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தங்கலாம் என்று ஆவேசப்படுகிறார். 

இன்னும் ரெண்டு நாள்ல என் பிறந்த நாள் வருது, அதுக்கு நான் தலைமை தாங்கி சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடத்த போறேன், 5 லட்சம் ரூபாய் பரிசு தர போறேன் என்று சொல்ல முத்துப்பாண்டி எதுக்கு பா இதெல்லம் என்று கேட்க சௌந்தரபாண்டி நான் சொன்னதை செய், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணு என்று உத்தரவு போடுகிறார்.

அதன் பிறகு மறுநாள் சிலம்பாட்டம் குறித்த போஸ்டரை பார்த்த ஷண்முகம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 லட்சம் ரூபாயை வெல்ல முடிவெடுக்கிறான். இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வைகுண்டம் கபடி போட்டியிலேயே உன்னை கொல்ல பார்த்தான், வேண்டாம் என்று சொல்ல ஷண்முகம் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான். 

மேலும் படிக்க | Viral Video: தியேட்டரை கொளுத்திய அஜித் ரசிகர்கள்... தீனா வெளியீட்டில் அட்டகாசம்

கபடி போட்டியின் போது ட்ரீட்மெண்ட் கொடுக்க பரணி இருந்தா, இப்போ அவ வேற மெடிக்கல் கேம்ப் போயிருக்கா என்று சொல்ல பரணிக்கு தெரிந்தா கலந்துக்க விட மாட்டா, அவ வரதுக்குள்ள இந்த போட்டியில் கலந்துக்கிட்டு பரிசை வென்று காட்டுறேன் என்று சொல்கிறான். அதோடு இல்லாமல் சௌந்தரபாண்டி கூட்டிய கூட்டத்துக்கு சென்று ஏன் மாமா எனக்கு 5 லட்சம் குடுக்கறதா இருந்தா நேரா கொண்டு வந்து கொடுக்க வேண்டியது தானே, எதுக்கு இப்படி தலையை சுத்தி மூக்கை தொடுறீங்க என்று கேட்டு போட்டியில்  கலந்து கொள்வதை பற்றி பேசி ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News