அண்ணா சீரியல்: பறி போன ரத்னாவின் வேலை.. சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட ஷண்முகம்

Zee Tamil Anna Serial Update: பறி போன ரத்னாவின் வேலை.. சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2024, 03:34 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • முருகன் கோவிலுக்கு வரும் சண்முகத்தை பார்த்த பூசாரி.
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அண்ணா சீரியல்: பறி போன ரத்னாவின் வேலை.. சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட ஷண்முகம் title=

Zee Tamil Anna Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னம் வேலை போக முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் தான் காரணம் என்று அறிந்த ஷண்முகம் அரிவாளை எடுத்து கொண்டு கிளம்ப பரணி அவனை சமாதானம் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழில் பல தொலைக்காட்சிகள் விதவிதமான கதையம்சங்கள் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பு வருகின்றன. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பிரபலமான சீரியல், அண்ணா (Anna Serial) தொடரில், இன்று (ஏப். 24) நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.அதாவது, பரணியும் சண்முகமும் ஸ்கூல் ஓனரை சந்தித்து எதுக்காக ரத்னாவை வேலையை விட்டு எடுத்தீங்க என்று கேட்க அவர் என் அப்பா ஆரம்பித்த ஸ்கூல் என்பதால் தான் இதை தொண்டாக நினைத்து இந்த ஸ்கூலை நடத்திட்டு வரேன், வேணும்னா நீங்க இந்த ஸ்கூலை எடுத்து நடத்துங்க என்று சொல்ல பரணி சம்மதம் சொல்ல ஷண்முகம் அதிர்ச்சி அடைகிறான். 

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் நீ பாட்டுக்கு ஸ்கூலை எடுத்து நடத்த சம்மதம் சொல்லிட்ட என்று திட்டுகிறான், பரணி ரத்னாவோட ஆசை என்ன தெரியுமா? என்று அவளது ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் கனவு பற்றி எடுத்து சொல்கிறாள். ஒரு அண்ணன் என்றால் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறது மட்டும் வேலை இல்ல, அவங்களோட கனவையும் நிறைவேற்ற வேண்டும் என்று புரிய வைக்க ஷண்முகம் இந்த ஸ்கூலை நாம எடுத்து நடத்துறோம் என்று சொல்லி கிளம்பி வருகிறான். 

மேலும் படிக்க | மே10ம் தேதி வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்!

முருகன் கோவிலுக்கு வரும் சண்முகத்தை பார்த்த பூசாரி என்னப்பா பூ போட்டு பார்க்கணுமா என்று கேட்க ஷண்முகம் உங்களுக்கு எப்படி அது தெரியும் என்று கேட்க ஏற்கனவே பரணி வந்து பூ போட்டு பார்த்துட்டாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார், ஷண்முகம் நீ எதுக்கு கோவிலுக்கு போய் பூ போட்டு பார்த்த என்று கேட்க நீ நேரா அங்க தான் போவேன்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறாள். 

மேலும் எவ்வளவு செலவு ஆனாலும் ஸ்கூலை எடுத்து நடத்துறோம், ஸ்கூலுக்கு முருகன் பெயரை வைக்கிறோம் என்று சொல்கிறாள், அதன் பிறகு நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து அடேய் சௌந்தரபாண்டி நான் அந்த ஸ்கூலை எடுத்து நடத்துறேன், என் தங்கச்சியை பிரிசிபலாக்கி கி காட்டுறேன் என்று சவால் விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News