Savukku Shankar: மே 28 வரை கஸ்டடி நீட்டிப்பு... நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை - முழு விவரம் இதோ!

Savukku Shankar Custody Extended: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை வரும் மே 28ஆம் தேதி நீட்டித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 14, 2024, 07:25 PM IST
  • கடந்த மே 4ஆம் தேதி சவுக்கு சங்கர் கைதானார்.
  • அவர் மீது மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவாகியுள்ளது.
Savukku Shankar: மே 28 வரை கஸ்டடி நீட்டிப்பு... நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை - முழு விவரம் இதோ! title=

Savukku Shankar Custody Extended Till May 28: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த மே 4ஆம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்றைய தினம் அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் மட்டும் காவல் வழங்கி அனுமதி அளித்தார். 

அதனைத் தொடர்ந்து இன்று மாலையுடன் சவுக்கு சங்கரின் காவல் முடிந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்நிலையில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும் தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க | அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைது? நடிகை விந்தியா குற்றச்சாட்டு!

7 வழக்குகள் 

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தது. தொடர்ந்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி மேலும் ஒரு வழக்கு அவர் மீது தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து அந்த வழக்கிலும் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த கஞ்சா வழக்கில் அவரது கார் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து காரில் கஞ்சா இருப்பதை தொடர்ந்து அவரது சென்னை மதுரவாயில் வீட்டிலும், தி.நகரில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட்கள், இரண்டு லட்சம் ரூபாய், ஹார்ட் டிஸ்குகள், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இதன்பேரிலும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பாய்ந்தது குண்டாஸ்

தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி,பத்திரிகையாளர் சந்தியா ஆகியோர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்து அது தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர். சவுக்கு சங்கர் மீது திருச்சி காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ உடைய ஆவணங்களை போலியாக தயாரித்து அது தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை சவுக்கு சங்கர் வெளியிட்டதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அந்த 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அவர் மீது நேற்று முன்தினம் (மே 12) குண்டாஸ் சட்டம் பாய்ந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News