சட்டப்பேரவை வைர விழாவில் மதவாத கட்சிகளை அழைக்க மாட்டோம் என்று திமுக சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது, திமுகவிடம் அரசியல் நாகரிகம் கிடையாது. கருணாநிதியை வைத்து குறுகிய அரசியலை நடத்துகிறது திமுக. கருணாநிதியின் வைரவிழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும். பாஜக மதவாத கட்சி என்று திமுகவினர் பரப்பி வருகிறார்கள். பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏன் திமுக கூட்டணி வைத்தது? அப்போது பாஜக மதவாத கட்சி என்பது தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக்கு எதிராக போராடிய பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸாரும், அதிரடிப் படையினரும் திடீரென தடியடி நடத்தினர். போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் சட்டத்தை மீறக்கூடாது என தமிழிசை கூறியுள்ளார்.
பொது மக்களும், பொது நல அமைப்புகளும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி சாலிகிராமத்தில் உள்ள சாலையில் செல்லும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவார்கள். 10-வது ஆண்டான இன்று காலை 5 மணி முதல் 8 மணி வரை அந்த பகுதி வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து பரிசும் வழங்கினார்கள். அதை அந்த பகுதியில் வசிக்கும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.