வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை எந்த வகையிலும் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு அதிகாரி கூறுகையில், பாதிக்கப்படக்கூடிய நிலையங்களில் வெப்காஸ்டிங் மற்றும் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாகும். எனினும், இம்முறை நாம் தொற்றுக்கு மத்தியில் இந்த கடமையை ஆற்றவுள்ளோம் என்பதை நாம் கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும்.
தனது தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விமர்சித்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, இன்று (வியாழக்கிழமை) அவரை கண்டித்ததுடன், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தங்கள் கட்சி மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், தேர்தலில் தூய்மையை உறுதி செய்வதையும் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்யவே விடுக்கப்பட்டுள்ளன என்று திமுக ஆலோசகர் நீதிபதிகளிடம் கூறினார்.
தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிக்கு செல்லாமலே வாக்களிக்கும் முறை 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சாத்தியமாகலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நோட்டாவுக்கு அதிக பட்சமான வாக்குகள் கிடைத்தால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.