திருவண்ணாமலையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளைக் கைது செய்து, குண்டுக்கட்டாக அழைத்துச் சென்ற காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உதகையில் உள்ள அரசு கலை கல்லூரியில் லஞ்சம், பாலியல் சர்ச்சை, போலிசான்றிதழ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து உயர் கல்வி துறையைச் சார்ந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், 2வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு அருகே, கவுண்டம்பாளையம் பகுதியில், தகாத உறவில் இருந்த பெண்ணை திடீரென திருமணம் செய்து கொண்ட கணவனை தட்டிக்கேட்ட மனைவி மீது, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரையில், காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலனை தாக்கிவிட்டு, மாணவியை, வாலிபர்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற சென்றவர்களிடம் நகர்மன்ற தலைவரின் கணவரும் திமுக நகர செயலாளரும் ஒருமையில் பேசி சண்டைக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
தூத்துக்குடியில் கடந்த 2015-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்ட விவசாயி வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் வெற்றிலை பாக்கு வாங்கிய கட்டிட தொழிலாளி கவனக்குறைவாக தனது செல்போனை தேங்காய் மீது வைத்து விட்டு எடுக்காமல் சென்ற நிலையில், அதே கடைக்கு வந்த ஒருவர் தேங்காய் வாங்குவதுபோல், செல்போனை எடுத்துக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தின் அடியில் பனியன் கம்பெனி தொழிலாளி ஒருவர் தலையில் மது பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூர் அருகே அதிவேகத்தில் வந்த ஆட்டோ ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே, இளம் பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காயமடைந்த பெண், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் பல சமப்வங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இளைஞர்கள் சிலர் இதில் மூழ்கியதால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அது தொடர்பான சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.