IND vs PAK: அடம்பிடித்த பாகிஸ்தான் இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? இதுதான் பின்னணி

IND vs PAK: வரவிருக்கும் ஆசிய கோப்பை-2023 அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஆகஸ்ட் 31 முதல் தொடங்கும். தொடரை பாகிஸ்தானுக்கு நடத்தினாலும், வெற்றி பிசிசிஐக்குத்தான்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2023, 02:52 PM IST
  • ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி
  • இந்தியா பின்வாங்க மறுப்பு
  • ஒருவழியாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
IND vs PAK:  அடம்பிடித்த பாகிஸ்தான் இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? இதுதான் பின்னணி title=

ஆசியக் கோப்பை தொடர்பான இழுபறி வியாழன் அன்று முடிவுக்கு வந்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என அந்நாடு கோரிக்கை வைத்த நிலையில், அதனை இந்தியா திட்டவட்டமாக புறக்கணித்தது. இதனால், ஆசியக்கோப்பை தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இப்போது ஒருவழியாக முடிவு பெற்று போட்டி தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

பாகிஸ்தான் பணிந்தது

ஆசிய கோப்பை 2023 போட்டியை நடத்துவது குறித்து சில காலமாக சர்ச்சைகள் நிலவி வந்தது. இப்போது ஜூன் 15 வியாழன் அன்று, இந்த போட்டியின் தேதிகள் அறிவிக்கப்பட்டன.  ஆகஸ்ட் 31 முதல் ஆசியக் கோப்பை தொடங்கும். ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இருப்பினும், அட்டவணையை விட, இந்த போட்டி எந்த நாட்டில் விளையாடப்படும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால், ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்துகிறது. அதனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் செல்ல திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதில் மீண்டுமொருமுறை இந்தியாவுக்கே வெற்றி கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க | Asia Cup 2023 Date: நினைத்ததை சாதித்த இந்தியா... ஆசிய கோப்பை நடக்கும் இடங்கள் அறிவிப்பு!

இந்தியாவின் ஆதிக்கம்

உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் எவ்வளவு என்பதை பிசிசிஐ மீண்டும் நிரூபித்துள்ளது. ஜெய் ஷா தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராக இருக்கிறார். அவர் பிசிசிஐ செயலாளராகவும் உள்ளார். அரசியல் காரணங்கள் காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய போட்டிகளை தவிர்த்து மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடத்துவது குறித்த திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி 4 போட்டிகள் பாகிஸ்தானில் நடத்த சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் திட்டம்

இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்ததும், பிசிபியும் மிரட்டத் தொடங்கியது. இந்த விஷயம் ஐசிசிக்கு சென்றது, ஆனால் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் கூறப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், இந்த ஐசிசி போட்டியில் பாகிஸ்தான் விளையாட வேண்டும் என்றால், இந்தியாவுக்கு செல்ல வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் இறுதியாக ஒரு கலப்பின மாடலை வழங்கியது. அப்போது, ​​ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா தனது போட்டிகளை விளையாடலாம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.

இலங்கை விளையாட இதுதான் காரணம்

ஆனால் இதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தது.  செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் துபாயின் வானிலை மிகவும் சூடாக இருக்கும். அரேபியாவின் வெப்பத்தை கண்டு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் இந்த திட்டத்தை ஏற்க மறுத்தன. உலகக் கோப்பை ஆண்டில் துபாயின் வெப்பம் வீரர்களை தொந்தரவு செய்யலாம் என்று கூறினார். பின்னர், ACC தலைவர் ஜெய் ஷா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் 4 போட்டிகளை தவிர மற்ற போட்டிகளை இலங்கையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | NO POCSO: போக்சோ வழக்கில் ஆதாரம் இல்லை! பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு க்ளீன் சிட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News