சித்ரா பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம் - சிறப்புகள் இதோ..!

இந்தாண்டு சித்ரா பவுர்ணமி விழா மே 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் கிரிவலம் சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 2, 2023, 09:27 PM IST
சித்ரா பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம் - சிறப்புகள் இதோ..! title=

சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக தமிழகத்தில் கிரிவலம் செல்ல பிரசித்தி பெற்ற தலமான திருவண்ணாமலையில் உகந்த தலம். அந்நாளில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துவிடுவார்கள். மாநில அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும். இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி இரவு சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அருணாச்சலேஸ்வரரை மனமுவந்து வணங்கினால், சகல தீர்வுகளையும் தருவார். 

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இது பிரபஞ்சத்தை உருவாக்கிய பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் படி, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவ பெருமான் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைக் கொண்டவர். மற்ற நான்கு கூறுகள் நீர், மண், காற்று, வாயு ஆகும். இந்த அழகிய கோவில் ஆனது, திருவண்ணாமலை மலையின் அடிவாரத்தில் உள்ளது.

மேலும் படிக்க | சூரியன்-புதன் சேர்க்கை: புத ஆதித்ய யோகத்தால் இந்த ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்

அஷ்டலிங்க தரிசனம்

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது, கிரிவலம் செல்லும் பாதையில் அஷ்டலிங்கம் எனப்படும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்க, நிருத்திலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் மற்றும் ஈசன்யலிங்கம் ஆகும். இந்த ஒவ்வொரு லிங்கமும் பக்தர்களுக்கு பல்வேறு விதமான பலன்களைத் தருகின்றன. கிரிவலம் செல்லும் போது முதல் லிங்கம் இந்திர லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபடுபவதால் பக்தர்களுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கும்.

கிரிவலம் செல்லும் போது பின்பற்ற வேண்டியவை

கிரிவலம் செல்லும் போது, பக்தர்கள் வெறுங்காலுடன் மட்டுமே செல்ல வேண்டும். கிரிவலம் வழியாக கிரிவலத்தின் உச்சியைப் பார்க்கவும். அதே சமயம், பௌர்ணமி இரவுகளில் மட்டும் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும். சாதாரண இரவுகளிலும் கிரிவலம் செல்வதும் நல்லது. ஆனால், பௌர்ணமியில் கிரிவலம் செல்வது சிறப்பைத் தரும். கிரிவலம் செல்பவர்கள் ஓம் அருணாச்சலா அல்லது ஓம் நமச்சிவாய என்ற சிவ நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

சித்ரா பௌர்ணமி கிரிவல நேரம்

சித்ரா பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்லக் கூடிய நேரம் ஆனது மே 4, 2023 இரவு 11.59 மணி முதல் மே 5, 2023 இரவு 11.33 மணி வரை ஆகும்.

மேலும் படிக்க | சனி சுக்கிரன் சேர்க்கை: நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News