நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன?

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2024, 12:31 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.
நினைத்தேன் வந்தாய்: சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடரிடம் சண்டை போட்டு எழிலிடம் பல்பு வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! அட, இந்த நடிகரா..

அதாவது மனோகரி சுடரின் ரூமை வேகவேகமாக தட்ட கதவை திறந்ததும் உள்ளே சென்று எல்லாவற்றையும் களைத்து போட்டு எதையோ தேட சுடர் என்ன தேடுறீங்க என்று கேட்டும் பதில் சொல்லாமல் தேடுகிறாள். அதன் பிறகு கனகவல்லி அங்கு வந்து என்ன தேடுற என்று கேட்க என் ஜெயினை காணோம், எல்லா பிராடு வேலையும் இவ தான் செய்வாள், அதனால் தான் இவ ரூமில் தேடுவதாக சொல்ல கவின் சோபாவில் இருந்ததாக ஜெயினை கொண்டு வந்து கொடுக்க கனகவல்லி சுடரிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மன்னிப்பும் கேட்க வைக்கிறாள். 

இதனையடுத்து சுடர் தன்னுடைய அப்பாவை கோவிலில் வைத்து சந்திக்க அவர் நீ என்கூடவே வந்துடு மா என்று கூப்பிட நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடி கூப்பிட்டு இருந்தா வந்திருப்பேன் பா, இப்போ வந்தா அஞ்சலி ரொம்ப கஸ்டப்படுவா என்று சொல்கிறாள். பிறகு உன் அம்மா அக்காவை யார் கிட்ட கொடுத்தாலோ அந்த லேடியை பார்த்ததாக சொல்ல சுடர் அப்போ அக்கா சென்னையில் தான் இருக்காளா என்று சந்தேகப்படுகிறாள். 

அடுத்து எழில் குழந்தைகள் எல்லாரையும் கூட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறான், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்றும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News