கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் ராதிகா சரத்குமார்? நாளை வெளியாகும் அறிவிப்பு

Radhika Sarathkumar, Kanimozhi: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக ராதிகா சரத்குமார் பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை வெளியாகும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இந்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 17, 2024, 11:51 AM IST
  • தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கப்போவது யார்?
  • திமுக வேட்பாளராக களமிறங்கும் கனிமொழி
  • பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிட வாய்ப்பு
கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் ராதிகா சரத்குமார்? நாளை வெளியாகும் அறிவிப்பு title=

லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகிவிட்டது. திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது மட்டுமே இன்னும் எஞ்சியிருக்கிறது. ஏனென்றால் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருக்கும் கனிமொழி அங்கு போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்டோர் திமுக தலைமையிடம் மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கனிமொழிக்கு ஆதரவாக விருப்பமனு அளித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | Nirmala Sitharaman: அரசு வெள்ள நிவாரணம் வழங்குவது பிச்சையா? நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு

அதனால் அவர் அங்கு திமுக சார்பில் போட்டியிடுவது உறுதியாக இருக்கும் நிலையில், அவரை எதிர்த்து களம் காணப்போகும் வேட்பாளர் மட்டுமே யார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த முறை அந்த தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிட்டது. இப்போது தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திர ராஜன் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை போட்டியிட்டதால் தூத்துக்குடி தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி வாகை சூடினார். தமிழிசை சவுந்திர்ராஜன் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது.

இப்போதும் கனிமொழிக்கு ஆதரவான சூழலே நிலவுவதாக திமுக தலைமை நம்புகிறது. ஏனென்னறால் கடந்த ஆண்டு இறுதியில் தூத்துக்குடி கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது தொகுதியிலேயே முழுவதுமாக முகாமிட்டிருந்தார் கனிமொழி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியதுடன் அரசின் உதவியையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் பெற்றுக் கொடுத்தார். கிராமம் கிராமமாக திமுக கட்சி நிர்வாகிகளுடன் பயணித்தார். இதனால் அவருக்கான செல்வாக்கு அங்கு அபரிமிதமாக இருக்கிறது.

இந்த சூழலில் இம்முறையும் தூத்துக்குடி தொகுதியில் பாஜக நேரடியாக களம் காண திட்டமிட்டு வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. அதற்காக சசிகலா புஷ்பா மற்றும் அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதால் ஒருவேளை சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு டிவிஸ்டாக ராதிகா சரத்குமார் கனிமொழிக்கு எதிராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாடு பாஜக நேரடியாக களம் காணும் தொகுதிகளில் முதல்கட்ட வேட்பாளர்கள் பெயரை இறுதி செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதில் தூத்துக்குடி தொகுதிக்கு ராதிகா சரத்குமார் பெயரை சேர்த்துள்ளார்களாம். நாளை வெளியாகும் பாஜக வேட்பாளர்களின் அடுத்த பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலும் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதில் தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்: 21 தமிழக மீனவர்கள் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News