காவேரியில் கருணாநிதி: சென்னை வருகிறார் ஆந்திரா முதல்வர்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார். இன்று பகல் 11.30 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 4, 2018, 09:36 AM IST
காவேரியில் கருணாநிதி: சென்னை வருகிறார் ஆந்திரா முதல்வர்! title=

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார். இன்று பகல் 11.30 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.

இதை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று உடல்நலம் குறித்து கேட்றிந்தார்.

இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார். பகல் 11.30 மணி அளவில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வரும் சந்திரபாபு நாயுடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News