தவறை உணர்ந்துவிட்டேன்... சவுக்கு சங்கரின் பரபரப்பு வாக்குமூலம் - முழு விவரம் இதோ!

Savukku Shankar Confession: தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும், பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன், அது தவறுதான் எனவும் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 17, 2024, 04:11 PM IST
  • சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  • திருச்சி சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.
  • அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை - சவுக்கு சங்கர்
தவறை உணர்ந்துவிட்டேன்... சவுக்கு சங்கரின் பரபரப்பு வாக்குமூலம் - முழு விவரம் இதோ! title=

Savukku Shankar Confession Latest News Update:​ பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கோயம்புத்தூர் காவல்துறையினரால் தேனியில் வைத்து கடந்த மே 2ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மொத்தம் 8 வழக்குகள் சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. 

தொடர்ந்து, அவருக்கு மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதொடருந்து ஒரு நாள் அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் போலீஸ் காவலுக்கு திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா நேற்று அனுமதி அளித்தார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (அதாவது இன்று) மாலை 4 மணிக்கு மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார். 

பரபரப்பு வாக்குமூலம்

இந்நிலையில், திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. அதில் சவுக்கு சங்கர் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை எனவும் பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன், அது தவறுதான் எனவும் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | நீலகிரி மாவட்டத்துக்கு இந்த மூன்று நாட்கள் போகாதீங்க - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கண்டன அறிக்கை

அதில், தமிழக அரசையும், காவல்துறையையும் தொடர்ந்து விமர்சிக்கும் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் போன்ற ஊடகவியலாளர்களை மீது பழிவாங்கும் நோக்கில், ஊடகச் சுதந்திரத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.  

மேலும், சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடத்தி அவரது வலது கையை உடைத்த கோவை மத்திய சிறைக் காவலர்கள், சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை எடுத்து வருகின்றனர். ஊடகவியலாளர்கள் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் கைது, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுன்றி இந்த கண்டன அறிக்கையில் கூறியதாவது,"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் போன்றவற்றில் சவுக்கு சங்கர் அரசுக்கும், காவல்துறைக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஊடகத்தை வைத்துக் கொண்டு உள்நோக்கத்தோடு தவறான, பொய்யான கருத்துகளைத் தெரிவிக்கும் போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து சவுக்கு சங்கர் மீது தமிழக அரசும், காவல்துறையும் குண்டர் சட்டத்தை ஏவுவது, பொய்யாக கஞ்சா வழக்குப் போடுவது, கையை உடைப்பது என அடக்குமுறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது" என்றனர். 

மேலும் படிக்க | ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியா? இளங்கோவனுக்கு தமிழிசை கொடுத்த பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News