இன்னும் 4 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Guru Vakra Transit: 4 நாட்களுக்குப் பிறகு, குரு வக்ர பெயர்ச்சி காரணத்தால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 24, 2022, 01:24 PM IST
  • சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும்
  • வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை துலாம் ராசியினருக்கு நன்மை அளிக்காது.
  • வக்ர இயக்கத்தால் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இன்னும் 4 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

குரு பகவான் வியாழன் இன்னும் நான்கு நாட்களில் அதாவது வருகிற ஜூலை 29 ஆம் 2022 தேதி தனது ராசியை மாற்றுகிறார். அதன்படி குரு பகவான் வியாழன் மீனத்தில் வக்ர நிலையில் இருக்கும், அதன் பிறகு நவம்பர் 24 குரு பகவான் மீண்டும் இதே நிலையில் இருக்கும். வியாழன் கிரகத்தின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக செல்வம், பெருமை, மகிழ்ச்சி, கல்வி மற்றும் குழந்தைகளின் காரணியாக குரு பகவான் வியாழன் கருதப்படுகிறார். அதன்படி வியாழன் கிரகத்தின் வக்ர இயக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும். 

இந்த நிலையில் இந்த நேரத்தில், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வகையில் பணம் பெற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. சுருக்கமாக கூறினால் இந்த ராசிகளின் ஜாதகத்தில் குபேர யோகம் நிச்சயம் உருவாகும் என்றே கூறலாம். எனவே குரு வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | நிறைவான செல்வம் பெற வேண்டுமா; குபேரர் அருளை பெற செய்ய வேண்டியவை 

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் வியாழன் 11 ஆம் வீட்டில் வக்ர நிலையில் இருக்கப் போகிறார். வக்ர இயக்கத்தால் உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்கள் லாபம் அடையலாம். உங்களின் பணி நடை மேம்படும்.

மிதுனம்- குரு பகவான் வியாழன் மிதுன ராசிக்கு பத்தாம் வீட்டில் பிற்போக்கு நிலையில் வருகிறார். இந்த டிரான்ஸிட் மூலம், பணித் துறையில் மாற்றங்களைக் காணலாம். உத்தியோக மாற்றம் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

கடகம் - குரு பகவான் வியாழன் உங்கள் ராசியிலிருந்து 9 ஆம் வீட்டில் பின்வாங்குவார். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டம் அடையலாம். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபமும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும். பணத்தால் நன்மை உண்டாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம் - குரு பகவான் வியாழன் கும்பத்தின் இரண்டாவது வீட்டில் பிற்போக்குத்தனமாக இருக்கும். இதன் போது பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இந்த ராசியினர் மனைவிக்கு முழு ஆதரவு கிடைக்கும். இருப்பினும், செலவுகளால் மனம் கலங்கலாம்.

ஜூலை 29 முதல் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

சிம்மம்- சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த காலகட்டத்தில் நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார ரீதியாக நீங்கள் போட்டுள்ள திட்டங்களில் பாதிப்புகள் வரக்கூடும். இதன் காரணமாக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். பண விஷயத்தில் இந்த காலத்தில் மிக கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

துலாம்- வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை துலாம் ராசியினருக்கு நன்மை அளிக்காது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தேவையற்ற செலவுகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும்.

மகரம்- மகர ராசியின் அதிபதி சனி தேவன் ஆவார். வியாழன் கிரகத்தின் தலைகீழ் இயக்கம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் அவசர முடிவுகளை எடுத்து பணத்தை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்கார்ரகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. இவர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மரியாதை அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம். பண விவகாரத்திலும், பிற வியாபாரிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News