நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 8, 2024, 03:28 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் காவியா.
  • மனோகரியை ஆப் ஆக்கும் எழில்.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரிடம் சவால் விட்ட எழில் அஞ்சலியையும் கவினையும் குளிக்க வைக்க படாதபாடு பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் காவியா

அதாவது அஞ்சலி, கவினை குளிக்க வைத்ததை தொடர்ந்து எழில் காவியாவுக்கு தலை வாரி விட அது தப்பாக வர கண்ணாடியில் தலையை பார்த்த காவியா கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாள், அதன் பிறகு எழில் அதை சரி செய்து அபிக்கு தலை வாரி விடுகிறான். பிறகு எல்லாருக்கும் ஷூ, சாக்ஸ் போட்டு விடுகிறான். 

அடுத்து எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறி சாப்பிட வைக்க அஞ்சலி ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்க எழில் அவளுக்கு ஊட்டி விட விரலை பிடித்து கடித்து விடுகிறாள், இந்த நேரம் பார்த்து இங்கு வரும் மனோகரி எழில் சாப்பாடு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். நீ எதுக்கு எழில் இதெல்லாம் பன்னிட்டு இருக்க? அதுக்கு தானே சுடர் இருக்கா என்று சொல்கிறாள். 

மனோகரியை ஆப் ஆக்கும் எழில்

உடனே சுடர் நான் பண்றேனு அவர் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அவன் சொன்னா நீ விட்டுடுவியா என்று கேள்வி கேட்க நீங்களும் தான் நான் எதுவும் செய்ய கூடாதுனு சொன்னீங்க என்று மடக்குகிறாள் சுடர். பிறகு எழில் நான் தான் செய்யறதா சொன்னேன் என்று மனோகரியை ஆப் ஆக்குகிறான்.

மேலும் படிக்க | மே 17ம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பாகுபலி கிரவுன் ஆஃப் பிளட்!

அடுத்து சுடரின் அப்பா சுப்பிரமணியம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது  பெண் ஒருவரை பார்க்கிறார். இதை பார்த்ததும் அவருக்கு தனது மனைவி முதல் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்த விஷயங்கள் நினைவுக்கு வருகிறது, அந்த பெண்ணிடம் பேச ஓட அவர் மிஸ்ஸாகி விடுகிறார். வீட்டில் அஞ்சலி என் பிறந்த நாளை கொண்டாடவே இல்ல, அப்ப தான் எனக்கு உடம்பு முடியாமல் போய்டுச்சு என்று வருத்தப்பட சுடர் கேக்குடன் கிப்ட்டையும் கொண்டு வந்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய அஞ்சலி சுடரை கட்டி பிடித்து கொள்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | +2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் எடுத்த மார்க்! எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News