சிஎஸ்கேவின் வெறித்தனமா பௌலிங்... தோல்வியால் பஞ்சரானது பஞ்சாப் - டாப்பில் சென்னை!

PBKS vs CSK Match Highlights: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளேஆப் வாய்ப்பு இன்னும் பிரகாசமாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 5, 2024, 07:53 PM IST
  • ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
  • சான்ட்னர், ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
சிஎஸ்கேவின் வெறித்தனமா பௌலிங்... தோல்வியால் பஞ்சரானது பஞ்சாப் - டாப்பில் சென்னை! title=

PBKS vs CSK Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 53வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தரம்சாலா மைதானத்தில் மோதின. இந்த போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் டாஸை கோட்டைவிட்டார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, ருதுராஜ் - மிட்செல் சேர்ந்து பவர்பிளேவில் ரன்களை குவிக்க 6 ஓவர்களில் 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு சிஎஸ்கே 60 ரன்களை குவித்தது. ஆனால் பவர்பிளேவுக்கு பின்னர்தான் சிஎஸ்கேவுக்கு பிரச்னையே தொடங்கியது. 

தோனி டக்அவுட்

ருதுராஜ் 32, தூபே 0, மிட்செல் 30, மொயின் 17 என தொடர்ந்து விக்கெட்டுகளை கொடுத்தனர். ஜடேஜா - சான்ட்னர் உடன் சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். 15வது ஓவருக்கு பின் சான்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17, தோனி 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் தோனியின் விக்கெட்டை ஸ்லோ யார்க்கர் போட்டு அசத்தலாக எடுத்தார். கடைசி ஓவரில் ஜடேஜாவும் சில பவுண்டரிகளை அடித்து ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?

இதன்மூலம், சிஎஸ்கே 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. ராகுல் சஹார், ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. சான்ட்னர் முதல் ஓவரை வீசி 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். 

சீறும் சிஎஸ்கே

2வது ஓவரை தேஷ்பாண்டே அசத்தலாக வீசி பேர்ஸ்டோவ் மற்றும் ரூசோவை ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து பவர்பிளேவில் அருமையாக வீசி 6 ஓவர்களுக்கு 46 ரன்களை மட்டுமே சிஎஸ்கே கொடுத்தது. அதன்பின் ஆட்டம் சிஎஸ்கே பக்கம் திரும்பியது. ஷஷாங்க் 27, பிரப்சிம்ரன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

தொடர்ந்து, விக்கெட்டுகள் சரிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 139 ரன்களையே எடுத்தது. இதன்மூலம், சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே மற்றும் சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். 

புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி +0.700 ரன்ரேட்டுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் தொடர்கிறது. இன்னும் 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு உறுதியாகும். மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகவே தொடரில் இருந்து வெளியேறியது.

மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News