7th Pay Commission: MTNL BSNL ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... ஓய்வூதியத்தில் பம்பர் ஏற்றம், வந்தது தீர்ப்பு

7th Pay Commission: தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஐடிஏ ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இப்போது கிடைத்துள்ளது.

 

MTNL மற்றும் BSNL ஐடிஏ ஓய்வூதியதாரர்கள் 7வது ஊதியக் குழுவின்படி ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் ஓய்வூதியதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. MTNL மற்றும் BSNL இன் IDA ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை 7வது ஊதியக் குழுவின்படி 10 வாரங்களுக்குள் திருத்தி அமைக்குமாறு PCAT உத்தரவிட்டுள்ளது.

1 /8

MTNL மற்றும் BSNL ஐடிஏ ஓய்வூதியதாரர்கள் 7வது ஊதியக் குழுவின்படி ஓய்வூதியத்தை மாற்றியமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

2 /8

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் ஓய்வூதியதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. MTNL மற்றும் BSNL இன் IDA ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை 7வது ஊதியக் குழுவின்படி 10 வாரங்களுக்குள் திருத்தி அமைக்குமாறு PCAT உத்தரவிட்டுள்ளது.  

3 /8

மத்திய அரசு ஊழியர்களின் பல்வேறு வகைகளை நிர்வகிக்கும் தொடர்புடைய விதிகள் மற்றும் தகுதிகளின்படி, சரியான சமத்துவத்தை பேண ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

4 /8

ஓய்வூதிய ஆணையத்தின் பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திருத்தத்தின் பலன்கள், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் விஷயத்தில் திருத்தத்தின்படி, விண்ணப்பதாரர்களுக்கு ஆதரவாக நீட்டிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

5 /8

"இந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் கிடைத்த நாளிலிருந்து பத்து வார காலத்திற்குள் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்" என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. PCAT இன் முடிவு MTNL மற்றும் BSNL இன் IDA ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். 

6 /8

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற BSNL ஊழியர்களும் ஓய்வூதியத் திருத்தக் கோரி வீதிகளிலும் இறங்கினர். இது தொடர்பாக ஆண்டின் தொடக்கத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017 முதல் அதில் எந்த திருத்தமும் இல்லை என ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.

7 /8

ஏழாவது ஊதியக்குழுவின்படி ஓய்வூதியத்தை சீரமைக்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்தனர். 2000-ம் ஆண்டு பிஎஸ்என்எல் தொடங்கப்பட்டபோது ஊழியர்களின் ஓய்வூதியத்தை மத்திய அரசே வழங்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், மற்ற மத்திய ஊழியர்களின் வரிசையில், 7வது ஊதியக் குழுவின் வழிகாட்டுதலின்படி அதில் திருத்தம் செய்யப்படவில்லை. 

8 /8

இந்த வழக்கு 2017 முதல் நிலுவையில் இருந்தது. தற்போது வந்துள்ள இந்த தீர்ப்பு MTNL மற்றும் BSNL ஐடிஏ ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.