வெளியேறிய சிஎஸ்கே வீரர்... என்ட்ரி கொடுக்கும் அனுபவ வீரர் - இனி உலகக் கோப்பையில் அதகளம்தான்!

ICC World Cup 2023: இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் காயத்தால் உலகக் கோப்பை தொடரில் விலகி உள்ளார். இதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக அனுபவ ஆல்-ரவுண்டர் ஒருவரை அந்த அணி அழைத்துள்ளது. 

  • Oct 24, 2023, 19:26 PM IST

ICC World Cup 2023: இலங்கை அணியில் யார் வெளியேறியது, யாரை அந்த அணி அழைத்துள்ளது என்பது குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

1 /7

உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி நெதர்லாந்து அணியிடம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, மற்ற மூன்றிலும் தோல்வியடைந்து 9ஆவது இடத்தில் உள்ளது.   

2 /7

அந்த அணி முதல் இரண்டு போட்டிகளில் 300+ ரன்களை தாண்டினாலும் அதில் அந்த அணியால் வெற்றியடைய இயலவில்லை. அந்த அணியின் பந்துவீச்சு மிக மோசமாக உள்ளது.   

3 /7

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 428 ரன்களை கொடுத்தது, பாகிஸ்தானை 345 ரன்கள் சேஸ் செய்யவிட்டது என பந்துவீச்சு மிக மோசமானதாகவே அமைந்தது.   

4 /7

அதில் முக்கியமாக இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவின் பந்துவீச்சு பெரிதாக அந்த அணிக்கு கைக்கொடுக்கவில்லை. முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 95 ரன்கள் கொடுத்து 1 விக்கெட், இரண்டாவது போட்டியில 9 ஓவர்கள் வீசி 90 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் என ரன்களை வாரி இறைத்தார்.   

5 /7

பாகிஸ்தான் போட்டியில் பதிரானாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அடுத்த 2 போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.  

6 /7

இந்நிலையில், மதீஷா பதிரானாவுக்கு பதில் அனுபவ வீரர் ஏஞ்சலோ மாத்யூஸை இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்று வீரராக அறிவித்துள்ளது. அவர் இங்கிலாந்துடன் நாளை மறுநாள் (அக். 26) நடைபெறும் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

7 /7

36 வயதான ஏஞ்சலோ மாத்யூஸ் இலங்கைக்கு அணிக்காக மொத்தம் 221 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5865 ரன்களையும், 120 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். இலங்கை அணியின் கேப்டன் ஷனகாவும் காயத்தால் தொடரில் இருந்து சில நாள்கள் முன் விலகியது குறிப்பிடத்தக்கது.