சேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதி

கெங்கவல்லி அருகே கடம்பூர் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து  ஒருவர் உயிரிழப்பு, இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2024, 09:51 PM IST
  • சேலம் பட்டாசு ஆலை வெடிவிபத்து
  • ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சேலம் கெங்கவல்லி பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு, முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் உறுதி title=

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் மேற்கு காடு பகுதியில் வசிப்பவர் தனசேகரன். இவர் கடந்த பத்தாண்டுகள் மேலாக அவரது சொந்தமான விவசாய தோட்டத்தில் பட்டாசு குடோன் வைத்துள்ளார். சிறிய கட்டடங்களில் நான்கு கட்டி பட்டாசு செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது பட்டாசு குடோனில் உள்ள மூலப் பொருட்களை எடுப்பதற்காக கூலமேடு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் ஒரு கட்டிடத்திற்குள் சென்று உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக தீபிடித்து ஒரு குடோன் முற்றிலும் வெடித்து சிதறியது. 

மேலும் படிக்க | தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ விவகாரம் : பாஜக நிர்வாகிகள் ஜாமீன் மனு தள்ளுபடி

இதில் ராஜமாணிக்கம் என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சத்தியா, விஜயா ஆகிய இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கடம்பூர் பட்டாசு ஆலை வெடிவிபத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், " சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (16.5.2024) மாலை சுமார் 5.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 45) த/பெ.ஆண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்." என கூறியுள்ளார். அதேநேரத்தில் பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம் குறித்து கடம்பூர் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

மேலும் படிக்க | 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News