புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!

புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.    

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2024, 06:43 AM IST
  • குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு?
  • மக்களுக்கு வயிற்று வலி, வாந்தி.
  • குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை.
புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை! title=

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான் தெரு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 35 க்கு மேற்பட்ட பட்டியல் இன சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குரு வாண்டான் தெரு ஆதி திராவிடர் காலணியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்திக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து ஆதிதிராவிடர் காலனி மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஐந்து குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் குடிநீர் கலங்கலாக வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தூய்மை பணியாளரான சரவணன் என்பவரை அழைத்து தூய்மை பணியில் ஈடுபட்ட பொழுது அதில் மாட்டு சானம் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எரிய இளைஞர்கள் மாட்டு சாணம் கலக்கப்பட்டது உண்மை என்று தெரிவித்தனர். இந்நிலையில் மாட்டு சாணம் கலந்த குடிநீரை குடித்த அப்பகுதி பொதுமக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த அரசு தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீரில் கலக்கப்பட்ட அந்த அசுத்தத்தை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் ஆய்வில் மாட்டு சாணம் என்று நிரூபிக்கப்பட்டால் மாட்டு சாணம் கலந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் தான் - அமைச்சர் ரகுபதி!

வேங்கை வயல் சம்பவம் தொடர்பான விசாரணையின் பின்னடைவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற காரணம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, சங்கமம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரை குடித்த பட்டியலின மக்கள் சிலருக்கு, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து, குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

புகார் தொடர்பாக குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து ஒன்றரை வருடங்களை நெருங்கிய நிலையிலும், இன்று வரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலையில் தான், அதுபோன்றதொரு குற்றங்கள், நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குற்றம் தொடர்பான விசாரணையில் ஏற்படும் தொய்வு, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் தொய்வு போன்றவையே இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது. 

ஆகவே, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, சங்கமம்விடுதி ஊராட்சி பகுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்தும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் 10 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, குடிநீரின் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்யும் நடவடிக்கையையும், அதனை கண்காணிக்கும் நடவடிக்கையையும் தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | உதகையில் சிசிடிவி கேமராக்கள் ஏன் வேலை செய்யவில்லை? அதிகாரிகள் விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News