சர்க்கரை நோய் இருக்கா... ‘இந்த’ தவறுகளை மட்டும் செஞ்சுடாதீங்க..!!

நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறைகளில் ஒரு ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஒழுங்கு முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவை உங்கள் நீரிழிவு நோயை மேலும் தீவிரமாக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 1, 2024, 12:00 PM IST
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சில கவனக்குறைவுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம்.
  • டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சீரான உணவு மிகவும் முக்கியமானது.
சர்க்கரை நோய் இருக்கா... ‘இந்த’ தவறுகளை மட்டும் செஞ்சுடாதீங்க..!! title=

நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறைகளில் ஒரு ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஒழுங்கு முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவை உங்கள் நீரிழிவு நோயை மேலும் தீவிரமாக்கும். ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. தினசரி உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா, போன்ற செயல்பாடுகள் இல்லாதவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனுடன், அதிகப்படியான துரித் உணவுகளும் இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இரவில் தாமதமாக உணவை சாப்பிட்டுவிட்டு, உடனே தூங்கினால், நீங்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம். இதனுடன், நீரிழிவு அபாயத்தை உருவாக்கும் அல்லது அதிகரிக்கும் சில தவறுகளை செய்யக் கூடாது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சில கவனக்குறைவுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம்.

1. ஃபிட்னஸில் கவனம் செலுத்தாமல் இருப்பது

நாள் முழுவதும் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தால், நீங்கள் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ளீர்கள். எனவே, தினமும் குறைந்தது 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். நடைபயிற்சி, ஜாகிங், யோகா, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம். நீங்கள் ஏற்கனவே நீரிழிவு நோயாளியாக இருந்தால், உடல் பயிற்சியுடன் கூடவே குறைந்தது 20 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உடல் செயல்பாடுகளைச் செய்வது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதே நேரத்தில் மூச்சுபயிற்சி ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ஆக்ஸிஜனை வழங்குகிறது. கல்லீரல் நச்சுக்களை நீக்குகிறது. இன்சுலின் சரியாக சுரக்க உதவுகிறது.

2. பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்வது

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சீரான உணவு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இரத்த சர்க்கரையுடன் நேரடியாக தொடர்புடையது. அத்தகைய சூழ்நிலையில், பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது(Health Tips). வெள்ளை சர்க்கரை, மாவு, அரிசி, கோதுமை மற்றும் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவற்றுக்குப் பதிலாக, உங்கள் உணவில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி கோதுமைக்கு பதிலாக சிறுதானியங்களை எடுத்துக் கொள்ளவும். ராகி, சாமை, வரகும் குதிரைவாலி, தினை போன்றவற்றை சாப்பிடுங்கள். எப்போதும் உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுங்கள். பசுவின் பால் மற்றும் நெய்யை குறைந்த அளவு உட்கொள்வதும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் நெல்லிக்காயை ‘இப்படி’ சாப்பிடுங்கள்! உடலில் பல மேஜிக் நடக்கும்..

3. சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள்

சரிவிகித உணவை சாப்பிடுவது மட்டுமல்ல, சரியான நேரத்தை தேர்வு செய்வதும் முக்கியம். இரவில் தாமதமாக உணவு உண்பது நம் உடலில் இரத்த சர்க்கரை சமநிலையை சீர்குலைக்கும், இதன் காரணமாக டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்வது சிறந்தது. சில காரணங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், இரவு 8 மணிக்குப் பிறகு எதையும் சாப்பிட வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

4. இரவு உணவு உண்ட உடனே தூங்க வேண்டாம்

சர்க்கரை நோய் மற்றும் ப்ரீ டயாபெட்டீஸ் உள்ளவர்கள் சரியான நேரத்தில் தூங்குவதும், போதுமான தூக்கம் பெறுவதும் அவசியம். இரண்டு சந்தர்ப்பங்களிலும், நீங்கள் பகலில் தூங்கக்கூடாது, ஏனெனில் இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது மற்றும் இருமல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இரவு உணவுக்கு பின் மூன்று மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது. இருப்பினும், சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்வது நல்லது.

5. சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் பிற நோய்கள்

நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், இது உங்கள் தவறான கருத்து. ஆரோக்கியமான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இந்த ஆபத்தான நோயை நீங்கள் எதிர்த்துப் போராட முடியும். இதைச் செய்யாவிட்டால், சர்க்கரை நோய் வேறு பல நோய்களை உண்டாக்கும். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | Weight Loss Diet: எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்ன என்ன நன்மைகள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News