அடாவடி கொலஸ்ட்ராலை கச்சிதமாய் சமாளிக்கும் கற்றாழை: நன்மைகளின் லிஸ்ட் இதோ

Cholesterol Control Tips: பல எளிய இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். அவற்றில் ஒன்று கற்றாழை சாறு. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 16, 2024, 05:07 PM IST
  • கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.
  • மலச்சிக்கலில் இருந்து விடுதலை.
  • சருமத்திற்கு நன்மை பயக்கும்.
அடாவடி கொலஸ்ட்ராலை கச்சிதமாய் சமாளிக்கும் கற்றாழை: நன்மைகளின் லிஸ்ட் இதோ title=

Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை இந்த காலத்தில் மக்களிடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இது பெரும்பாலும் நமது ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக ஏற்படுகின்றது. முன்னர் ஒரு சிலரை மட்டுமே பாதித்து வந்த கொலஸ்ட்ரால் இன்று பலரை பாடாய் படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.

கொலஸ்ட்ரால் நமது ஆரோக்கியத்தின் எதிரியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை உருவாக்குகிறது. இதைத் தவிர்க்க, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பல எளிய இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். அவற்றில் ஒன்று கற்றாழை சாறு. கற்றாழையை நாம் பொதுவாக முகம் மற்றும் சரும அழகை அதிகரிக்கப் பயன்படுத்துகிறோம். எனினும், பல நோய்களின் அபாயத்தையும் இதன் மூலம் நாம் பெருமளவு குறைக்க முடியும் என்பது மிகச் சிலருக்குத்தான் தெரியும்.

கற்றாழை சாறு

கற்றாழை ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. ஏனெனில் அதன் மருத்துவ குணங்கள் காரணமாக இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது. கற்றாழை சாறு பேக் செய்யப்பட்டு பல வகைகளில் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது. எனினும் இந்த சாற்றை வீட்டிலேயே பிரித்தெடுப்பது சிறந்தது. ஏனெனில் ஃப்ரெஷ்ஷான பொருட்களால் அதிக நன்மைகள் ஏற்படுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கிளாஸ் கற்றாழை சாறு குடிக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Aloe Vera Juice)

1. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது

கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் குறையும். இதை குடிப்பதால் இரத்த நாளங்களில் உள்ள அடைப்பு குறைகிறது. இது மட்டுமின்றி இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க | சரும பராமரிப்புக்கு மட்டுமல்ல, நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படும் வாழைப்பழத்தோல் மகிமை!

2. மலச்சிக்கலில் இருந்து விடுதலை

நமது உணவில் எண்ணெய் பதார்த்தங்கள் அதிகமாக உள்ளன. இவற்றை அதிகம் உட்கொண்டால், அதன் காரணமாக வயிற்றில் பிரச்சினைகள் தொடங்குகின்றன. இதில் அஜீரணம், மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயுத்தொல்லை ஆகியவை அடங்கும். இதனால் பல சங்கடங்களும் உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற, கற்றாழை சாறு குடிக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

3. சருமத்திற்கு நன்மை பயக்கும்

கற்றாழை சாறு நம் சருமத்திற்கு ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்தாக பயன்படுகின்றது. அதனால்தான் இது பெரும்பாலான அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. சரும பாதுகாப்பில் கற்றாழை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இதை குடிப்பதால் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும் முகமும் பிரகாசமாகத் தெரியும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? இரத்த புரதம் சொல்லும் ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News