Green Deposit களத்தில் புகுந்தது எஸ்பிஐ! அருமையான இந்தத் திட்டத்தில் NRIக்கு எவ்வளவு வட்டி?

Green Rupee Term Deposit: பசுமை ரூபாய் கால வைப்புத்தொகையை அறிமுகப்படுத்துகிறது, NRI களும் இதில் முதலீடு செய்யலாம்! முதலீட்டாளர்களுக்கு 1,111 நாட்கள், 1,777 நாட்கள் மற்றும் 2,222 நாட்கள் என 3 திட்டங்கள் உள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 12, 2024, 07:37 PM IST
  • முதலீட்டாளர்களுக்கான நிலையான கால வைப்புத் திட்டம்
  • சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் பசுமை டெபாசிட் திட்டங்கள்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை உட்பட 9 துறைகளுக்காக பசுமை டெபாசிட் திட்டம்
Green Deposit களத்தில் புகுந்தது எஸ்பிஐ! அருமையான இந்தத் திட்டத்தில் NRIக்கு எவ்வளவு வட்டி? title=

SGRTD Term Deposit By SBI:  நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக பசுமை ரூபாய் டெர்ம் டெபாசிட் திட்டத்தை (Green Rupee Term Deposit) அறிமுகப்படுத்தியது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) உட்பட அனைத்து தனிநபர்களும் இந்தத் திட்டம் மூலம் பயனடையலாம்.1,111 நாட்கள், 1,777 நாட்கள் மற்றும் 2,222 நாட்கள் என மூன்று வெவ்வேறு தவணைக்காலங்களில் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பணத்தை டெபாசிட் செய்யலாம்.  

பசுமை வைப்புத்தொகை என்றால் என்ன?
பசுமை நிலையான வைப்பு என்பது ஒரு வகை நிலையான கால வைப்பு ஆகும், இதில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை சுற்றுச்சூழலின் நலனுக்காக திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் வைக்கும் பணம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன், நீர் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு போன்ற துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க | வீட்டுக் கடனில் இருந்து சீக்கிரம் விடுபட்டு நிம்மதியாக இருக்க... சில எளிய டிப்ஸ்!

தங்களிடம் உள்ள பணத்தை சுற்றுச் சூழலியலுக்கு உதவும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது மற்ற டெபாசிட்களை போல் இல்லை. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே பசுமை டெபாசிட்கள் பயன்படுத்தப்படும், முதிர்வு அல்லது இடையில் பணத்தை திரும்ப எடுப்பது உள்ளிட்ட அனைத்து விதிகளும் மற்ற டெபாசிட் திட்டங்களை போலவே தான் இருக்கும்.

ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் வங்கி, டிபிஎஸ் வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா போன்ற சில நிறுவனங்கள் ஏற்கனவே பசுமை நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக பசுமை டெபாசிட் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | kalaignar centenary: பிரம்மாண்டமான அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்! சிறப்பு

முதலீடு செய்வது எப்படி?
 
எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா இது தொடர்பாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தற்போது இந்த திட்டம் கிளை நெட்வொர்க் மூலம் கிடைக்கிறது, விரைவில் இது 'யோனோ' ஆப் மற்றும் ஆன்லைன் பேங்கிங் போன்ற டிஜிட்டல் ஊடகங்களிலும் கிடைக்கும்.

பசுமை வைப்புத்தொகை முதலீடு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஆற்றல் திறன், பசுமை கட்டிடம், சுத்தமான போக்குவரத்து, நிலையான நீர் மற்றும் கழிவு மேலாண்மை, மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, இயற்கை வளங்களின் மேலாண்மை, நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நில பயன்பாடு  என ஒன்பது துறைகளில் பசுமை டெபாசிட் பணத்தை நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும். 

மேலும் படிக்க | Cash Limit: ரொக்கமா வீட்டில் எவ்வளவு பணம் இருக்கலாம்? இதுக்கு மேல இருந்தா பிரச்சனை தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

பசுமை வைப்பில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றனர். இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பம் ஆகும். பச்சை வைப்புத்தொகைக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் வழக்கமாக பாரம்பரிய நிலையான வைப்புத்தொகைக்கு கொடுப்பதை விட அதிகமாக இருக்கும்.

இது தொடர்பாக, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) ஆகியவற்றுக்கு பசுமை டெபாசிட் தொடர்பான வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது எஸ்பிஐ வங்கி, சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக பசுமை ரூபாய் டெர்ம் டெபாசிட் திட்டத்தை (Green Rupee Term Deposit) அறிமுகப்படுத்தியுள்ளது.

Trending News